நரேந்திர மோடி : இந்தியாவிற்கு அவமானமா ?
March 18, 2005 at 7:26 am | Posted in வகைப்படுத்தாதவை... | 7 Comments
நரேந்திர மோடிக்கு diplomatic விசா மறுக்கப்பட்டதும் tourist மற்றும் business விசா ரத்து செய்யப்பட்டதும் இந்தியாவிற்கே அவமானம் என்று பாரதீய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் அனுதாபிகள் கூறத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் ஒரு மாநில முதலைமைச்சருக்கு மறுக்கப்பட்ட விசா இந்திய அரசியல்சாசனத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும் குஜராத்தி மக்களின் கவுரவத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பு என்றும் மோடி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் மைய அரசு தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
மோடியின் அமெரிக்க பயணம் அங்கிருக்கும் பல குஜராத்தி இந்துக்களால் அவரின் முஸ்லீம் குரோதத்திற்கு எடுக்கப்படும் பாராட்டு விழா. மோடி தொடர்ந்து தனது முஸ்லீம் விரோத நடவடிக்கையை தொடருவதற்கான ஆதரவு விழாவே தவிர ஒரு மாநில முதல்வரின் அரசு சார்ந்த பயணம் அல்ல. அங்குள்ள குஜராத்தி மக்களிடம் முதலீடு குறித்து பேச இருக்கிறார் என்ற வாதமும் கண்துடைப்பு தான்.
அமெரிக்காவில் இருக்கும் பல குஜராத்திகள் மோடியை குஜராத்தி மற்றும் இந்துக்களின் பாதுகாவலராகவே கருதுகின்றனர். இங்கிருக்கும் சங்பரிவார் அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருக்கும் குஜராத்திகள் மூலமாக அதிகளவில் பணம் கிடைக்கிறது. அமெரிக்கா, UK போன்ற நாடுகளில் உள்ள சங்பரிவார் அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத், HSS போன்ற பினாமி இயக்கங்கள் மூலமாக திரட்டப்படும் பணம் குஜராத் உட்பட நாட்டின் பல இடங்களில் இருக்கும் இந்து அமைப்புகளின் வெறியாட்டத்திற்கு உதவி புரிவதாகவே இருக்கிறது.
அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் சங்பரிவார் அமைப்புகள் தங்களை கலாச்சார இயக்கமாக, NGO’க்காளாக பதிவு செய்துள்ளன. இந்த அமைப்புகள் மூலமாக பணம் திரட்டப்படுகிறது. இது குஜராத் கலவரத்திற்கு பின்பு பலரால் கவனிக்கப்பட்டது. அதன் எதிரொலியாகத் தான் இப்பொழுது நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
தன் நாட்டிற்கு யார் வர வேண்டும் என்று முடிவு செய்ய அமெரிக்காவிற்கு முழு உரிமை உண்டு. அவ்வாறு நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்டதிலும் சரியான காரணங்கள் இருக்கிறது.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பொழுது அரசு இயந்திரங்களைக் கொண்டே முஸ்லீம் மக்களுக்கு எதிராக மத உணர்வையும் கலவரத்தையும் ஏற்படுத்தி முதல் அவமானத்தைக் கொடுத்த மோடி தற்பொழுது அந்த செயலால் மற்றொரு புது அவமானத்தை தேடிக் கொடுத்துள்ளார்.
மோடி இந்தியாவின் ஒரு மாநில முதலைமைச்சர் என்ற வகையில் இது இந்தியாவின் கவுரவத்திற்கு ஏற்பட்ட அவமானம் தான் என்றாலும் இது மோடி இந்தியாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்த அவமானம். இதற்கு மோடி தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருக்கும் ஒரே காரணத்திற்காகவே இது நாட்டிற்கு அவமானமாக தெரிந்தாலும், நரேந்திர மோடியே நம் நாட்டின் அவமானச் சின்னம் தான்.
இந்த விசா மறுப்பால் புதிய அவமானம் நமக்கு வந்து சேர்ந்து விடாது.
7 Comments »
RSS feed for comments on this post. TrackBack URI
Leave a comment
Blog at WordPress.com.
Entries and comments feeds.
நேற்றுத்தான் மோடியின் விழாவுக்கு ஸ்பான்சர் செய்த அமெக்ஸ் நிறுவனத்துக்கு நானும் ஒரு வாடிக்கையாளர் என்ற உரிமையில் கண்டனக் கடிதம் எழுதினேன். ஆனாலும் மோடி மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் தலைவர் என்ற முறையில், அமெரிககாவின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்கிறேன். அடக்குமுறை, இனவாதம் இவற்றில் நம்பிக்கை உள்ள (மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத) ஒரு ஆளை உலக வங்கிக்கு தலைவராக நியமிக்கத் துணிந்த அரசு, இவருக்கு விசா மறுத்தது சந்தர்ப்பவாதம் என்பது என் கருத்து.
Comment by Anonymous— March 18, 2005 #
அட, மேலே உள்ளதை எழுதினது நான் தான். என்னமோபோங்க ஒவ்வொரு பெட்டி ஒவ்வொரு விதமா வேலை செய்யுது!
ஒரு விளக்கம்: நான் கண்டனக் கடிதம் அனுப்பியது நான் வாடிக்கையாளராக உள்ள ஒரு வியாபார நிறுவனம் மோடி பக்கேற்கும் விழாவுக்கு ஆதரவு அளிப்பதை விலக்கிக்கொள்ளச் சொல்லித்தான். அந்த ஆளை உள்ளே விடாதே என்றல்ல. If you are not with us, you are against us என்ற புஷ்தனத்துக்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு.
-காசி
By: காசி
Comment by Anonymous— March 18, 2005 #
காசி,
நண்பர் தமிழச்சி அழகாகச் சொன்னார். இது நரேந்திர மோடி இந்தியாவிற்கு வாங்கித்தந்த அவமானம். திருவாளர் புஷ் நரேந்திர மோடியின் இன்னொரு வடிவம். அவ்வளவே. அவரும் தற்போதைய ஐ.மா அரசும் ஏதோ சகிப்புத்தன்மையுள்ள ஜன நாயக சக்திகளின் பிரதினிதியாக காட்டிக்கொள்ள முயல்வது நகைப்புக்குரிய விஷயம் தான். இது அதி தீவிர வலது சாரிகளின் காலம்.
கிருத்துவ அ.தீ.வலதுசாரிகள், முக்கியமாக முஸ்லிம் அ.தீ.வலதுசாரிகளுடனும், இந்து அ.தீ.மதவாதிகளுடன் மோதிப் பார்க்கின்றது. இது ஒதுங்கியிருந்து இந்த தமாஷுக்களை வேடிக்கை பார்க்க வேண்டிய காலம்.
னம் கருத்தை சொல்லும் போது மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. சற்று ஏமாந்திருந்தால் தலையில் காவி கொடி கட்டிவிடுவார்கள். ஜாக்கிரதி.
🙂 வினோபா.
Comment by vinobha karthik— March 18, 2005 #
Modi is not coming here as a govt representative. He is being invited by a sect of people. VISA is not a right, it is a privelage and is given by the descretion of a government. If a Government feels that Inviting a phonetic, might create problems among other religious sector and their country peace might be in danger, it has every right to reject the VISA.It is most of the time decided by the consolate.
Comment by தேன் துளி— March 18, 2005 #
காசி:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செர்பிய முன்னாள் ஜனாதிபதி மிலொசொவிச் ஹேக்கில் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோசவோ பிரதம மந்திரி ஹரதினாய் போன வாரமோ அதற்கு முந்திய வாரமோ ஹேக் போயிருக்கிறார். இவர்கள் ஊர் சுற்றிப்பார்க்கப் போகவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளை மத்திய அரசே வீட்டுக்கு அனுப்பலாம் என்கிற ஒரு நாட்டிருந்து வந்தவர்கள் இன்னொரு நாட்டினர் விசா தரவில்லை என்று குறைகூறுவது மொன்னையான தர்க்கம். இது மோடிக்கு மட்டும் போதிக்கப்பட்ட பாடமல்ல, அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தான்.
Comment by மு. சுந்தரமூர்த்தி— March 18, 2005 #
//மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளை மத்திய அரசே வீட்டுக்கு அனுப்பலாம் என்கிற ஒரு நாட்டிருந்து வந்தவர்கள் இன்னொரு நாட்டினர் விசா தரவில்லை என்று குறைகூறுவது மொன்னையான தர்க்கம். இது மோடிக்கு மட்டும் போதிக்கப்பட்ட பாடமல்ல, அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தான்.//
I agree.
Comment by Thangamani— March 18, 2005 #
பாசு மோடியால இந்தியாவுக்கு எல்லாம் அவமானம் இல்லை..
இந்தியாவால் தான் மோடிக்கு அவமானம்.
அவர் இந்தியாவில் இருந்து கொண்டு “இசுலாம்” மதத்திற்குச் செய்த சேவையை இந்தியா புரிந்து கொள்ளவில்லை.
இதுவே இவர் அமெரிக்காவில் பிறந்து “சார்சு புச்” தலைமையில் அதே செவையை “ஈராக்” கிற்கு செய்து இருந்தால்…
புச் இவருக்கு “Paul Wolfowitz ” மாதிரி உலக வங்கித் தலைவர் பதவியோ அல்லது “Condoleeza Rice” மாதிரி “US Secretary of State ” பதவியோ கொடுத்து
அழகு பார்த்து இருப்பார்.
அவரும் உலக நாடுகள் அனைதிற்கும் “Super Anna Visa” வில் சுற்றியிருப்பார்.
வீணாப் போன இந்தியாவில் பிறந்து அவரது சேவையை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க.
(யாராவது நான் மோடிக்கு “சப்போர்ட்டு” பண்ணுவதாய் நினைத்துக் கொள்ள வேண்டாம். இது “வஞ்சப் புகழ்ச்சி” யாக்கும். இணையத்தில் இப்போதெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது)
அன்புடன்,
கணேசன்
Comment by test— March 18, 2005 #